கொரோனா பெருந்தொற்று காலத்தின்போது வளரிளம் பருவத்தினர் பல்வேறு உளவியல் சிக்கல்களை எதிர்கொண்டனர். இதை ஈடு செய்யும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தேவையான மனவெழுச்சி நல்வாழ்வு மற்றும் வாழ்க்கை திறன்சார் பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மனவெழுச்சி நல்வாழ்வு கட்டகமானது 30 செயல்பாடுகளுடன் அடிப்படை மற்றும் இறுதி மதிப்பீட்டை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து செயல்பாடுகளிலும் UNICEFஆல் வரையறுக்கப்பட்ட பத்து விரிவான வாழ்க்கைத் திறன்களும் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த மனவெழுச்சி நல்வாழ்வு அம்சங்களும் (WHO) ஒருங்கிணைதக்கப்பட்டுள்ளது.. அடிப்படையில். ஒவ்வொரு செயலிலும் 4 பகுதிகள் உள்ளன. ஒவ்வொரு செயல்பாடும் ஒரு காணொலியுடன் தொடங்குகிறது, அதில் வாழ்க்கைத் திறனை அடிப்படையாகக் கொண்ட ஒரு கருத்து இயங்குபடமாக (அனிமேஷன்) மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து அறிவு அடிப்படையிலான செயல்பாடு ஒன்றின் வாயிலாக, மாணவர்கள் காணொலி மூலம் தாங்கள் பெற்ற அறிவை மூலம் தாங்களே மதிப்பீடு செய்து கொள்ளலாம். அறிவு அடிப்படையிலான செயல்பாட்டிற்குப் பிறகு, மாணவர்கள் கலை மற்றும் செயல்திறன் அடிப்படையிலான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர், இது அவர்களின் உயர்-சிந்தனை திறன் மேம்பட உதவுகிறது. பயிற்சியை முடித்தபின், மாணவரின் புரிதலை மேம்படுத்த செயல்பாடு வாயிலாக வலியுறுத்தப்படும் வாழ்வியல் திறன்கள் சுருக்கமாக தொகுத்து வழங்கப்பட்டு வருகின்றன.
அமர்வின் இறுதிப் பகுதியானது பிரதிபலிப்பு மற்றும் மதிப்பீடு பிரிவாகும், இதில் வழங்கப்பட்டுள்ள அறிவு சார்ந்த வினாக்கள் மற்றும் சில திறந்த வகை வினாக்கள் மாணவர்களின் கற்றலை பிரதிபலிக்கவும் வாழ்க்கையில் பயன்படுத்தவும் உதவும்.